Wednesday, May 7, 2014

மன-நோய்கள் - சில உண்மைகள்

1. நம்மில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு வகை மனநோயினால் அவதியுற்று வருகிறோம்.


2. உடலைப் போன்றே மனமும் எப்பொழுது வேண்டுமானாலும் நோயுறலாம்.

3. தலைவலி, காய்ச்சல், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் போன்ற உடல் நோய்களைப் போலவே மனநோய்களும் எளிதில் குணப்படுத்தக் கூடியவை.

4. மனநோய்கள் பில்லி, சூனியம், ஏவல், கிரகங்கள் பதிப்பு அகியவற்றின் காரணமாக எற்படுவதில்லை.

5. மரபு வழி சாத்தியக் கூறுகள் மற்றும் மன உலைச்சல்கள் ஆகியன மூளையில் எற்படுகின்ற இரசாயன மாற்றங்களால் தான் மன நோய்கள் ஏற்படுகின்றன.

6. மந்திரம் செய்வது, திருநீர் போடுவது, கயிறு கட்டுவது, சாமியாரிடம் செல்வது தீவிர வழிபாடு மற்றும் கோவில்களில் சென்று தங்குவது ஆகியன மனநோயினை எந்த விதத்திலும் குணப்படுத்த உதவாது.

7. மனநோயின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து மருந்துக்கள் உட்கொள்ளுதல் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு, மனோநோயாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களிடம் அன்போடும் அரவணைப்போடும் நடந்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் மனநோயாளிகளை எளிதில் குணப்படுத்தலாம்.

8. மனநோய்கள் குறித்து போதிய விழிப்புணர்வின்மை, ஆரம்ப நோய் அறிகுறிகளை அலட்சியம் செய்தல், தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளாமை, குடும்பத்தாரின் போதிய ஒத்துழைப்பின்மை, சமூகத்தின் எதிர்மறையான பார்வை ஆகிய காரணங்களால் தான் மனநோய்களை கையாளுவது கடினமாக உள்ளதே தவிர மற்றபடி மனநோய்களை போன்று முழுமையாக குணப்படுத்தக் கூடியவையே.



No comments:

Post a Comment